இந்த பூமியில் மனிதன் ஏராளமான குற்றங்களை செய்கிறான், அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனைகளை தருவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களின் மூலமும் இதை நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான்.அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள்.இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது