Saturday 25 June 2011

அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்


இந்த பூமியில் மனிதன் ஏராளமான குற்றங்களை செய்கிறான், அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனைகளை தருவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களின் மூலமும் இதை நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான்.அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள்.இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது

Thursday 23 June 2011

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

இறைவன் தன்னுடைய அளவில்லா கருணையினால் இஸ்லாம் என்ற அற்புதத்தை ஏற்கும் பாக்கியத்தை நமக்கு வழங்கியுள்ளான். கோடிக்கணக்கான மக்களில் நம்மை தேர்வு செய்து இந்த பாக்கியத்தை வழங்கியுள்ளான். பெரும் பெரும் செல்வந்தர்களுக்கும் நாட்டையே ஆளும் வலிமைபடைத்தவர்களுக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை இஸ்லாத்தை ஏற்றதின் மூலம் நாம் பெற்றிருக்கிறோம்.
நபியாக இருந்த இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தைக்குக் கூட இந்தச் சிறப்பு கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகனுக்கும் மனைவிக்கும் இன்னும் நபி லூத் (அலை) அவர்களின் மனைவிக்கும் இந்தச் சிறப்பு கிடைக்கவில்லை. நபிமார்களின் உறவினர்களுக்கு கிடைக்காத இவ்வளவு பெரிய பேற்றை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு நாம் கட்டாயமாக நன்றி செலுத்த வேண்டும். இஸ்லாம் காட்டும் இந்த நேர்வழியை ஏற்றுக்கொள்வது மாபெரும் அருட்கொடை என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்